லீகாட்: இரு பார்வைகள்

எழுத்தாளர், இதழாளர். மலேசிய அரசாங்கத் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வல்லினம் இனைய இதழின் ஆசிரியராக உள்ளார். இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள இவரது நான்காவது நாவல் இது.

நவீனின் முந்தைய மூன்று நாவல்களிலிருந்து விலகி, முழுவதுமான யதார்த்த உலகில் நிகழும் நாவலிது. மலேசியா பள்ளி ஒன்றில் பதின்மவயது சிறுவனின் பிரச்சனைகளை, தடுமாற்றங்களை, பாதை விலகுதலை, காமம் அரும்புவதை மையமாகக் கொண்ட நாவலிது. மலேசியாவில் பள்ளி ஆசிரியராகப் பலவருடங்கள் பணிபுரிந்த நவீனுக்கு Firsthand informations ஏராளமாக இருந்திருக்கும்.

Continue reading

லீகாட்: இரண்டு மறுப்புகளுக்கிடையில் ஓர் ஆயுள்- ரேவின்

பகுதி ஒன்று — ஒரு செல்லமான வாசகக் குற்றம்

என் வாசிப்பு மேசையில் ம. நவீனுக்காக ஒரு சிறிய அநீதி தொடர்ந்து நடக்கிறது. எத்தனை செவ்வியல் நாவல்கள் ‘அடுத்து நான்தான்’ என்று வாசிக்கப்படாமல் காத்திருந்தாலும், அவருடைய புதிய படைப்பு ஒன்று வந்தால் அது இயல்பாக வரிசையின் முதல் இடத்தில் அமர்ந்துவிடும். அதை அங்கே அமர்த்துவது புத்தகம் அல்ல; நான்தான். அந்த வாசகக் குற்றத்தை நான் தயக்கமின்றி, கொஞ்சம் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து செய்கிறேன். செவ்வியல் படைப்புகள் ஏற்கெனவே பல ஆண்டுகள் காத்திருக்கின்றன; இன்னும் சில நாட்கள் காத்திருக்கட்டுமே என்ற வசதியான நியாயமும் உடனே கிடைத்துவிடுகிறது.

Continue reading

லீகாட்: ஆண் அவஸ்தையும் தீராத அலைக்கழிப்பும் – பானுஷா அங்கப்பன்

பானு

லீகாட் நாவலை வாசித்தேன். விடலைப் பருவத்தில் நான் கண்ட பல்வேறு முகங்களை மீண்டும் ஒருமுறை கண்முன்னே இந்நாவல் நிழலாட வைத்துச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். நாவலின் கதைப்போக்கை ஒவ்வொரு கதைப்பாத்திரத்தின் வழி உற்றுநோக்கி அலசினேன். அதனை அனுபவத்தோடு ஒத்திசைத்துப் பார்க்கும் வேளையில் புரிதல்கள் ஆழப்பட்டன.

உணர்வின் அசைவுகளை அதன் இயக்கத்தால் மனிதன் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் விதங்களை அதன் எல்லையற்ற பெருவெளியைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. லீகாட் நாவல் குறிப்பாக விடலைப் பருவ மானிடரின் உணர்வு நிலையில்லாமையைத் திரையிடுகிறது. குறிப்பாக மனதின் ஆழத்தில் ஒடுங்கிக்கிடக்கும் காமம் எனும் பெருவுணர்வு தூண்டியெழுப்படும்போது அதன் வீரியம் எப்படியெல்லாம் ஒருவனை ஆட்டுவித்து வதைத்திடுகிறது; அவ்வுணர்வு தணிக்கப்பட்ட வேளையில் அவன் என்னவாகிறான் என்பதை விவரித்துக் காட்டும் கதைக்களத்தை மையமிட்டு இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Continue reading

லீகாட்: பாலியல் சிந்தனையும் சிக்கலான பதிலும் – லங்கேஷ்

லங்கேஷ்

பல சமயங்களில் நினைப்பதுண்டு தமிழில் எழுதப்பெற்ற பெரும்பான்மையான நாவல்கள் உறவுகள் மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்களை பேசுவதாக உள்ளது என்று!

உறவுகளுக்கான தொடக்கம் எங்கிருந்து என்று சிந்திக்கும் பொழுது அது விரல் நீட்டும் இடம் ஆசை இல்லையென்றால் அன்பு,  அடிநாதத்தில் ஒரு காமம்.

காமம் என்ற இடம் வரும் இடத்தில எல்லாம் ஒன்று இலைமறை காய்மறையாக சென்றுவிடுவோம், அல்லது காமத்தை காதலாகி மெல்லிய ஜானகிராமனின் உணர்வுபோல இலகுவாக்கிவிடுவோம்.

Continue reading

லீகாட்: இருளில் துளிர்ந்த ஒளி – மா. புஷ்பவள்ளி

எழுத்தாளரின் மண்டை ஓடி சிறுகதையின் தொடர்ச்சி என்று எண்ணி வாசிப்பைத் தொடர்ந்தேன். ஆனால், ஒரு சிறுகதையை விரிவாக்கம் செய்து ஒரு நாவலாக உருவாக்கிய எழுத்தாளரின் அபாரமான செயல் வியக்கதக்கது.  வாசிக்கும் போது நாவல் வேறுவொரு பரிணாமத்தை நோக்கி செல்வதை உணர்ந்தேன்.

இந்த நாவலில் சிறுவனாகத் திகழ்ந்து இளைஞனாக மாற்றம் காணும் தீபனின் உளவியலையும் அவனுள் ஏற்படும் உணர்வையும் பல அடுக்குகளாகப் பிரித்து விவரிக்கிறது.

Continue reading

லீகாட்: தீபனின் மற்றுமொரு ஆழம் – மலர்விழி மணியம்

“நீ மனிதர்களை உண்மையாக வழிநடத்த விரும்பினால் அவர்களின் ஆழங்களின் ஆழத்திற்குள் மூழ்கிச் செல். மனிதர்கள் வெறும் நுரைத்தெழும் அலைகள் அல்ல. மனிதர்களின் ஆழங்களின் ஆழத்திற்குள் நீ மூழ்கிச் செல்ல வேண்டுமெனில், முதலில் உனது ஆழத்தின் ஆழத்திற்குள் நீ மூழ்கிச் செல்ல வேண்டும்.”

மிக்கேல் நெய்மியின் “தி புக் ஆஃப் மிர்தாத்” ல் வரும் இவ்வரிகளைக் கொண்டு ம. நவீனின் படைப்புலகை வரையறுக்கலாம்.

மனிதர்கள் வகுத்தும் பெருக்கியும் வரையறுத்து வைத்துள்ள உறவுச் சிக்கல்களில் முறையாக வழிநடத்தத் துணை இல்லாமல் அகலமான வாயில்களை தேடிச் சென்றதன் விளைவாக தீபனின் வாழ்க்கை சிதறிப்போன விதங்கள் தான் ‘லீகாட்’ நாவலின் மையக்கதை.

Continue reading

லீகாட்: விடலை பருவத்தின் இருள் பக்கங்கள் – கணேஷ் பாபு

உலக இலக்கியத்தில் பதின்ம வயதினரைக் குறித்து எழுதப்பட்ட எண்ணற்ற நாவல்கள் உள்ளன. அவை யாவும் பதின்ம வயதினரின் வாழ்வின் பல்வேறுபட்ட பக்கங்களைத் திறந்து காண்பிப்பவை. அவர்களை வளர்ந்த சிறுவர்களாக பாவித்து அவர்களின் வேடிக்கை விநோதச் செயல்களைக் கவனப்படுத்தி எழுதப்பட்ட ஹக்லிபெரி ஃபின் மற்றும் டாம் சாயரின் சாகசங்கள் போன்ற நாவல்கள் ஒருபக்கம். மறுபக்கம், பதின்ம வயதினரின் வாழ்க்கைச் சிக்கல்களை அவர்களது துயரங்களைக் கவனப்படுத்தும் ஓலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள். மேலும் வயதடைதல் (coming of age) நாவல்கள் எனச் சொல்லப்படும் நாவல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. அவர்களின் மென்காதல் கதைகளையும் (பால்ய கால சகி, விடுமுறைக் காலக் காதல் கதை), சாகசங்களையும் (பதின்) சொல்லும் நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், நவீனின் லீகாட் நாவலில் பதின்ம வயதினரின் இன்னொரு பக்கம் காட்டப்பட்டிருக்கிறது. அது அவர்களுக்குள் புழங்கும் வன்முறையும் காமமுமே. இவற்றைச் சொல்லாமல் பதின்ம வயதினரின் வாழ்க்கையை முழுமையாகக் காட்டவே முடியாது. மற்ற நாவல்களில் காட்டப்பட்டிராத இந்தப் பக்கங்களைக் காட்டியிருப்பதன் மூலம் இந்த நாவல் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது.

Continue reading

லீகாட்: கையில் சிக்காத பம்பரம் -நோவா குருலு

லீகாட் நாவலைப் படித்து முடித்து விட்டேன்.

எப்போதுமே ஒரு நாவலைப் படித்து முடித்த பின் அதை எல்லா நேரங்களிலும் தியானித்து அசை போடுவேன். மாடு வருடத்தில் பிறந்ததால் அசை போடுவது எனக்குப் பழகிவிட்டது. லீகாட் எனக்கொன்றும் புதிய சொல் கிடையாது. லீகாட், செம்போய், மம்ப்போய் போன்ற சொற்கள் எனக்குப் பழகிப்போன சொற்கள்தான். நவீன் வாழ்ந்த அதே நிலப்பரப்பில், ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் இன்னொரு முனையில் பிறந்து வளர்ந்ததால், இந்தக் கதையின் கதாபாத்திரங்களை என் வாழ்நாள் முழுவதும் அருகிலிருந்து கண்டிருக்கிறேன். என்ன, ஒரு ‘ஹாய்’, ‘ஹலோ’, ‘பாய்’ என்றவாறு அவர்களைக் கடந்து போயிருக்கிறேன். அவ்வளவுதான். எனவே இது புனைவென எழுதப்பட்டிருந்தாலும், அதை முழுமையாகப் புனைவென்று ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது.

Continue reading

லீகாட் வாசித்த அனுபவம் – எம். பிரபு

ம. நவீனின் லீகாட் நாவல் என் கைகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்டன. நான் பெரும்பாலும் புத்தகங்களை மெதுவாகத்தான் வாசிப்பேன். உடனுக்குடன் வாசித்துவிட்டால், கொடுத்த தொகைக்கு ஒரேடியாகப் படித்து முடித்துவிட்டோமே என்ற எண்ணம் ஏற்படும்.

Continue reading

தீர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் புரிதலில் இறைவி வெளிப்படுகிறாள் – ஆசிர் லாவண்யா

வாழ்வின் எத்தனையோ தேவைகளும் அதைச் சார்ந்த தேடுதல்களும் இருந்த போதிலும் மனதின் ஆழ் அடுக்குகளில் முதன்மை இடத்தில் விளங்குவது ‘பசி’ ஒன்றே. அதுவே மனித வாழ்வின் நகர்வைத் தீர்மானிக்கிறது. அதுவே ஒருவரை திக்குகளற்ற முடிவெளியில் அலைக்கழித்த வண்ணமும் இருக்கிறது. அதை முன்னிறுத்தியே வாழ்வின் சக்கரம் சுழல்கிறது.

ஒருவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அவை எல்லாம் அச்சக்கரத்தின் சுழற்சிகளே; அதன் எல்லைக்குள் அடங்குபவையே. உடல் என்பது முதிர்ச்சி அடையும்போது சிறுக்கிறது; உள்ளம் முதிர்ச்சியடையும்போது விசாலமடைந்து ஒளிர்கிறது. ஆனால் முதிராத மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிலைக்கும்போது உண்டாகும் விளைவுகள் அபத்தமானவை. உள்ளம் நிற்க, உடல் மட்டும் ஓடும் முரண் நிலை இது. லீகாட்டின் மையம் அங்கிருந்து தொடங்குகிறது.

Continue reading