காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க… நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் தவிர. ஆனால் ஆறுமணி வாக்கில் அவன் புரண்டு படுக்கையில், கையை வீசிப் போடுகையில் அவளின் இடத்தில் அவள் இல்லாதிருப்பதால் அவனும் விழித்துக் கொள்ளலாம், ஏதாவது எரிச்சலோடு முணங்கி விட்டு புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போகலாம், மடார் மடார் என்று தண்ணீர் ஊற்றி அவள் குளிக்கும் சப்தத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சோப்பும் மஞ்சளும் கலந்த நறுமணத்தோடு குறுக்காக மட்டும் கட்டியிருக்கும் ஈரச்சேலையோடு வனப்பாக அவள் வரலாம் எனக் காத்திருந்துவிட்டு எழலாம்.
Continue reading மையம் →