கோப்பு

காணொளி

மையம்

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க… நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் தவிர. ஆனால் ஆறுமணி வாக்கில் அவன் புரண்டு படுக்கையில், கையை வீசிப் போடுகையில் அவளின் இடத்தில் அவள் இல்லாதிருப்பதால் அவனும் விழித்துக் கொள்ளலாம், ஏதாவது எரிச்சலோடு முணங்கி விட்டு புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போகலாம், மடார் மடார் என்று தண்ணீர் ஊற்றி அவள் குளிக்கும் சப்தத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சோப்பும் மஞ்சளும் கலந்த நறுமணத்தோடு குறுக்காக மட்டும் கட்டியிருக்கும் ஈரச்சேலையோடு வனப்பாக அவள் வரலாம் எனக் காத்திருந்துவிட்டு எழலாம்.
Continue reading மையம்

Share

திரைகடலோடி

“இன்னிக்கு எப்படியும் ரெண்டுல ஒன்னு பார்த்தரணும்… ஆமா” மணிராசு தீர்மானித்துக் கொண்டான்.

“இன்னும் எத்தன நாளைக்கு இந்த வூர்ல இந்த சீரழிந்த பொழப்பு…”

மனமும் வாழ்வும் கசந்தது.

சிந்தனையைச் சற்று நிறுத்திவிட்டு சாலையைப் பார்த்தான்.

எதையுமே பொருட்படுத்தாது அசுர வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தான்.

Continue reading திரைகடலோடி

Share

சுருதி பேதம்

கடைசியாக ஒரு முறை ‘திரு கனகசபாபதி – தலைமை ஆசிரியர்’ என்றிருந்த அந்த பெயர் பலகையை கண் நிறைய பார்த்துக் கொண்டேன். கண்களின் விளிம்பில் ஈரம் கசிகிறது.

இந்த பள்ளி ஆசிரியர் வாழ்க்கைதானே எனக்கு வாய்த்தது. எனது வாழ்வின் அர்த்தங்களை இங்கேதானே ஓடி ஓடி தேடினேன். காலையிலிருந்து இரவு வரை என் காலங்கள் இங்கேதானே கரைந்தது. ஐந்து வயதில் மாணவனாக நுழைந்து ஐம்பத்தி ஐந்து வயதில் தலைமை ஆசிரியனாக வெளியேறும் வரை என் இளமையும் முதுமையுமான இந்த வாழ்வு இந்த பள்ளிக்கூடங்களைச் சுற்றி சுற்றியேதானே வளர்ந்து, வாழ்ந்து தேய்ந்துள்ளது. மனைவி மக்களற்ற வீட்டில் கழித்த நேரங்களைக் காட்டிலும் இந்த கல்விக் கூடங்களில் வசித்த பொழுதுகள்தானே அதிகம்.
Continue reading சுருதி பேதம்

Share

கலகக்காரன்

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் நீயூரோ வார்ட் தன் காலை ஏழரை மணிக்கான சுறுசுறுப்புடன் இயக்கம் கண்டது.

எந்த நேரத்திலும் நியூரோசர்ஜன் டத்தோ டாக்டர் அறு வந்துவிடுவார்.

தாதிகளின் நடையில் ஒரு வேகம்.

Continue reading கலகக்காரன்

Share

நடப்பு

கம்போங் தேசாவின் மற்றைய இல்லங்கள் அந்த நடுநிசியில் துயில் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டில் மட்டும் மனித ஆரவாரம் வழக்கத்திற்கும் மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக ஐந்தாறு சிறுவர் சிறுமிகள் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி நடுநாயகமாய் ஒரு ஈஸி சேரில் பாச்சிஹசான் மடியில் தன் பேரனுடன் அமர்ந்திருந்தார். இருமருங்கும் நாலைந்து ஆண்களும் பெண்களுமாக உட்கார எது தோதாகக் கிடைத்ததோ அதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்துகொண்டிருக்க, தொலைக்காட்சிப் பெட்டி ஜகார்த்தாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நெடுந்தூர நடைப்போட்டியை நேரிடையாக அஞ்சல் செய்து கொண்டிருந்தது.
Continue reading நடப்பு

Share

தரிசனம்

சிலை சிரிக்குமா என்ன ?

“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணராஜ தஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாத வோதோ மாஆ – வஹ தாம் ம ஆவஹ..”

மந்திர சுலோகங்களை வாய் உச்சரிக்க, கைகள் வெங்கலக் குடத்தைக் கவிழ்க்க, நீர் அருவியாய்க் கொட்ட, அர்ச்சகர் மனம் மட்டும் எங்கோ, எதிலோ அலை பாய்வதை அறிந்து கொண்டவள் போல் முறுவலித்து நின்றாள் அம்மன்.

Continue reading தரிசனம்

Share

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

முள் கிரீடம் அணிந்திருக்கும் நீண்ட நெடுஞ்சுவர்கள் எப்போதும் ஏதோ ஒரு விதமான உணர்வுகளையே கிளர்த்தெழச் செய்யும். சிறைச்சாலையின் மதில்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது ஒரு பயம் கலந்த கற்பனையைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும். உள்ளே இருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு தீராத தவிப்பு, ஆழமான இரணம், தனக்கான நியாயங்களுடன் கூடிய ஒரு கதை கனன்று கொண்டிருக்கும்.

Continue reading முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

Share

கரிக்கும் உப்பின் அளவு ஒன்றுதான்

கொள்கை முழக்கங்களிலேயே அதி வசீகரமானது ‘வறுமை ஒழிப்பு’ என்பதுதான். இந்த அழகிய வார்த்தைகளை உச்சரிக்காத அரசியல் தலைவர்களின் உதடுகள் இல்லை, எழுத்தில் பிரகடனப்படுத்தாத தேர்தல் அறிக்கைகளோ, பொருளாதார கொள்கை முழக்கங்களோ இல்லை.

Continue reading கரிக்கும் உப்பின் அளவு ஒன்றுதான்

Share

மெய்பொருள் காண்பது அறிவு

யு.பி.எஸ்.ஆர் எனும் ஆறாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 917 ஜோடி கண்களில் வெற்றிக் களிப்பையும் பல்லாயிரக்கணக்கான கண்களில் கவலை, சோகம், விரக்தி, தோல்வி, ஏமாற்றம் என்ற எண்ணற்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுதிச் சென்றது. ஆண்டு தோறும் நடந்தேறும் நாடகம்தான் இது.

Continue reading மெய்பொருள் காண்பது அறிவு

Share

“சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?”

“இல்லை கருத்துக்களைச் சொல்ல சிறுகதை வடிவத்தை தேர்வு செய்யாதீர்கள். சிறுகதை கருத்துக்களைச் சொல்ல உண்டான இலக்கிய வகை இல்லை. கருத்துக்களை கட்டுரையில் சொல்லுங்கள்”.

இது பாலபாடம்.

கேட்டவர்: திரு.ரெ.சண்முகம்
பதிலளித்தவர்: திரு. பிரபஞ்சன்

Continue reading “சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?”

Share