இதழ் 12
டிசம்பர் 2009
  கவிதை
தீபச்செல்வன்
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

மீளவும் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்

பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம்.
எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும்
எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன.
எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக
ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில்
பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது.
பார்க்க முடியாதபடி
நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன்.

கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய்
நிதிலேகாவையும் குழந்தையையும்
மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள்.
தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம்
அவள் எனக்கே தந்திருந்தாள்.
என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த
அவளது குழந்தையை நான் பிரிய நேர்ந்தது.

தனது ஞாபகங்களை மறக்கவும் எதையும் தாங்கிக்கொள்ளவும்
அவள் பழகியிருந்தாள்.
தனது கணவனை வழியில் இழுத்துச் சென்ற ஷெல் பற்றிய
அதிர்ச்சியை அவள் மறந்துபோயிருக்கிறாள்.
அவளது குழந்தையுடன் எல்லாவற்றையும் பேசுகிறாள்.
எனது கூடாரத்தின் பாதியில்
அவள் தடுத்து வைத்திருந்ததினால்
எனக்கு ஆறுதலாக இருந்தது.
யுத்தகாலத்தின் நினைவுகளை முழுமையாக மறந்துவிடலாம்
என அவள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பாள்.
என்னால் தூக்க முடியாதவற்றை நான் விட்டுச்செல்லுகிறேன்.

இ;ன்னும் நாம் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறோம்
என்பதை யாரும் பேசிவிடாதீர்கள்.
பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
தயாராகவே வைத்திருக்கிறேன்.
மகிழ்ச்சிகரமாக இடம்பெயரவும்
சிலவேளை துக்கத்துடன் திரும்பிவரவும் நேரிடுகிறது.
வரும்பொழுது
வழிகளை எல்லாம் பார்த்து
பார்க்க முடியாத இடங்களிலெல்லாம்
அலைந்து கொண்டிருக்கிறேன்.
இடையில் சில பொருட்களை தவறவிட்டிருக்கிறேன்.
பிடுக்கி வைக்கப்பட்ட கூடாரத்தை
மீளவும் பொருத்தி வைத்திருந்தார்கள்.

நிதிலேகாவை அவளின் பள்ளிக்கூடத்தில்
இப்பொழுது தடுத்து வைத்திருக்கிறார்கள்.
அவள் தனது காணிக்கு சென்று திரும்புவாள்.
வீடு திரும்புபகிற கனவுகள் எவ்வளவு இனிமையானவை
என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
நிதிலேகா அதைப்பற்றி என்னுடன் நிறையவே பேசியிருக்கிறாள்.
என்னுடன்
இந்தக் கூடாரமும் சரிந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் யாருமற்ற தனித்த
நிலம் பற்றிய கதைகளையே இரவுகளில் அளந்துகொண்டிருக்கிறேன்.
மீளவும் இலவசமாக
பொருட்களை விநயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி
எல்லாமே தயாராக இருக்கின்றன.

பொதிகளில் எத்தனை ஏக்கங்கள் தவிப்புக்களை
அடைத்துவைத்திருக்கிறோம்.
அந்த ஒலிபெருக்கியை கழற்றி சூடாற விடுகிறார்கள்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768