முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012

  பயணிப்பவனின் பக்கம்... 18
தயாஜி
 
 
       
நேர்காணல்:

விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
கா. ஆறுமுகம்




கட்டுரை:


Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா



சிறுகதை:

மோப்பம்
கே. பாலமுருகன்

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி



கவிதைத்தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 1
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஏ. தேவராஜன்

ஷம்மி முத்துவேல்

ந. பெரியசாமி

எம். ராஜா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை:

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்



அறிவிப்பு:

வல்லினம் வகுப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

சொந்த மூக்கைவிட நாற்றமெடுப்பது ஏதுமுண்டா..?

மலையாலத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதி, தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘தோட்டியின் மகன்’ படித்தேன். வாங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. நாவலை வாங்குவதற்கு முன்பாக, வெறும் கேள்விபட்டு, நண்பர் நவீனிடம் இந்நாவல் குறித்து விசாரிக்கும் போதுதான் தெரிந்தது. தோட்டி என மலம் அள்ளுகின்றவர்களை அழைப்பார்களாம்.

ஏறக்குறைய ஒரு வாரத்தில் படித்து விட்டேன். தோட்டியின் மூன்று தலைமுறையை சொல்லியது நாவல். தோட்டியின் அன்றாட வேலையான மலம் அள்ளி அதனை சேமித்து, மல கிடங்கில் கொட்டும் வரை மிக எதார்த்தமாக, ஏறக்குறைய காணாத ஒரு வாழ்க்கையை வாசிக்க நேர்ந்தது. அது என்ன ஏறக்குறைய வாழ்க்கை.?

“குருசாமி எங்கள் ஊர்த்தெம்பர்களில் ஒருவன் . பறையன்களை விடவும் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படும் இவர்களின் தொழில் மலம் அள்ளுதல்”- மிக சமீபத்தில் படித்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’ என்ற நாவலில் அவ்வாறு வருகிறது.

அடுத்தடுத்து படித்த இரண்டு நாவல்களும் ஏதோ ஒரு வகையில் மனதை அலைக்கழித்தாலும் ஏனோ கடந்த நாள்களில் நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன்.

மலையகத்தில் மிக பிரபலமான ஆறுமுகம் பிள்ளை தோட்டம் அல்லது யு.பி தோட்டம். அதுதான் பிறந்தகம் எனக்கு. என் அம்மாவின் அப்பாவும் அம்மாவும், என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும்தான் எங்களுக்கு நினைவு தெரிந்தவரை எங்கள் முன்னோடி / மூதாதையர். இரண்டு புறத்திலும் குடி கூத்தாடியதால் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எங்கள் முழுமையான வரலாறு தெரிந்திருக்கவில்லை.

எனக்கும் அதன் அவசியம் அவ்வளவாய் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொன்னால் எங்கள் வம்ச வழிகளில் நானும் என அண்ணனும்தான் முதலில் தலை எடுத்திருக்கிறோம்.

அப்போது சொல்ல கேள்விப்பட்ட ஒன்றைத்தான் ‘தோட்டியின் மகனும்’, ‘எக்ஸிடென்சியலிசமும் பேன்சி பனியனும்’ நினைவுப்படுத்தியது.

மலம். இந்த சொல்லை நாங்கள் யாரும் சொல்லமாட்டோம். நாங்கள் என்பது எங்கள் தோட்டத்தில் இருந்த எல்லோரையும் சேர்த்துதான். ஆனால் ‘பீ’ என்ற வார்த்தை மட்டும் மிக இலகுவாக எல்லார் வாயிலும் நுழைந்துச் சென்றது. தேவைப்படும் இடங்கள் நகைச்சுவைக்காகவும், கோவப்படும் இடத்தில் அவமானப்படுத்துவதற்கும் இதை தவிர உபயோகமான வார்த்தையை யாரும் தெரிந்திருகவில்லை.

எங்கள் தாத்தா காலத்தில், தோட்டத்தில் இருப்பவர்களுக்கு என்றே கழிவறை இருந்ததான். ‘ஜாமகொட்டாய்’ அல்லது ‘ஜாமகொட்டகை’ அதன் பெயர். ஜாமத்தில் அதாவது விடியும் முன்பு, விடிந்து கொண்டிருக்கும் பொழுதை ஜாமம் என்றே சொல்லி பழையவர்கள் நாங்கள்.

ஒவ்வொரு நாள் இரவிலும் சீனர் ஒருவர் அந்த கழிவறையில் நாங்கள் சேமித்த மலங்களை அள்ளிக்கொண்டு போவாராம். மலேசியாவில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இப்போது இதை சொன்னால் நம்பமாட்டார்கள்.

ஜாமகொட்டகையில் இருக்கும் பெரிய குழியில் கொட்டிக்கிடக்கும் மலத்தையும் கைகளாலேயே அள்ளும் சீனனை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நினைவு தெரிந்த பொழுதினில் வீட்டிற்கு ஒரு கழிவறை வந்துவிட்டது. ஆனாலும் வீட்டில் உள்ளேயே இருக்கும் கழிவறைக்கு பல பாட்டி தாத்தாக்கள் செல்வதில்லை. “பீயை, போய் வீட்டில் வைச்சிருந்தா லெட்சுமி எப்படி வரும் கருமம் கருகம்...” இது அவர்களின் கவலை. இருந்த போதிலும் வீட்டில் எந்த லட்சுமியும் வந்து ஆடிவிடவில்லை.

பதினேழு பதினெட்டு வயதில் தனியார் கல்லூரியில் படிக்க நேர்ந்தது. வேறு வழியில்லை. வேலைச் செய்து கொண்டே படிக்க வேண்டும். அப்போதெல்லாம் ‘சாமி’ என்று அழைக்கப்படுபவரின் நெருங்கிய நண்பனாகவும் மாணவனாகவும் இருந்தேன். வீடுகளில், கோயில்களில் பூஜை செய்வது. அவர் ஓர் ஓவியர் என்பதால் கோவில் சிலைகளுக்கும் கோவில் கோபுரங்களுக்கும் வண்ணம் பூசும் வேலையும் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

அதோடில்லாமல், அவரது தம்பி தனியாக துப்புரவு செய்ய சில பேரை வைத்திருந்தார். தினமும் ஐந்து தொழிற்சாலைகளுக்கு சென்று துப்புரவு வேலைகளைச் செய்து மாலை வீடு திரும்ப வேண்டும்.

பெற்றோர் எதிர்ப்பையும் தாண்டி பகுதி நேரமாக துப்புரவு தொழிலுக்கு சென்றேன். “செக்கிலிதாண்டா இந்த வேலையெல்லாம் செய்வோன்”- என உறவினர்கள் திட்டினார்கள். ஒருவேளை தோட்டிகளைத்தான் அவர்கள் ‘செக்கிலி’ என சொன்னார்கள் போலும்.

முதல் நாள் துப்புரவு வேலையில் என்னை சந்தித்தவர்கள், என்னைப் பார்த்த பார்வையை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. அப்படி ஒரு பார்வை. என்னிடம் பேசுவதென்றால் பொதுப்படையாக கொஞ்சம் கத்தி யாருடனோ பேசுவது போல பேசுவார்கள். நானே அதை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு மேலும் உண்டு. பக்கத்தில் இருக்கும் என்னிடம் எதையும் சொல்லாமல், கைபேசியில் என் முதலாளிக்கு அழைத்து என்ன வேலையை நான் செய்யவேண்டும் என சொல்வார்கள். பிறகு முதலாளி என்னை அழைத்து செய்ய வேண்டிய வேலையைச் சொல்லி செய்ய சொல்லுவார். இதற்காகத்தான் நான் முதன் முதலாக கைபேசியை வாங்கினேன். அதையும் ஐந்து மாத தவணையாய் முதலாளியிடம் பணம் செலுத்தினேன்.

படித்தவர்களும் அந்தப் பார்வையை செலுத்தினர். இத்தனைக்கும் அந்த அளவுக்கு நாற்றமெடுத்த உடலுடன் நான் நடந்ததில்லை. பின்னர் நான் பகுதி நேரமாக படித்துக் கொண்டிருப்பதை தெரிந்ததும்தான் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள்.

தொடக்கத்தில் இவர்கள் என்னை ஒதுக்கியதன் காரணம் ஒன்றுதான். நான் அசுத்தமானவன், அவர்கள் வாசனையானவர்கள்.

அவர்களின் சுத்தம் உடம்பிலும் வாசனை திரவியத்திலும் மட்டுமே இருப்பதை உணர்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அந்த வயதில் வந்தும் வராத மீசையில் உடல் முழுக்க மறைக்கபட்ட நீல நிற ஆடையுடன், பெரிய காலணியுடன் இருந்த நான், பார்ப்பதற்கு இந்தோனியா மாதிரி இருப்பேன்.

அப்படி ஒருநாள் ஒரு மருந்து தொழிற்சாலையி இருக்க கூடிய கண்ணாடிகளைத் துடைத்துக் கொண்டிருந்தேன். மொத்தமே ஐந்து பேர்தான் அந்த தொழிற்சாலையில் இருந்தார்கள். மூன்று பேர் மலாய்காரர்கள். இரண்டு தமிழர்கள். முறையே ஆண் பெண்.

எனக்கு தமிழ் தெரியாது என நினைத்து அந்த ஆணும் பெண்ணும் பேசியபோது எனக்கேக் கூட உணர்ச்சி ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள். அந்த பெண்ணுக்கு ஒரு பையனும் அந்த ஆணுக்கு இரண்டு பிள்ளைகளும் இருப்பதை என் சக துப்புரவு தொழிலாளிகளிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

தத்தம் முதலிரவில் நடந்தையெல்லாம் இருவரும் மாறி மாறி பகிர்ந்துக் கொண்டார்கள். உடன், புதிய புதிய உடலுறவு முறைகளையும் அலசி ஆராய்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேல், இவர்கள் இருவரின் இடையின் நடந்திருந்த உடலுறவுகள் குறித்தும் கேலியாக பேசினார்கள்.

ஆணின் பலவீனத்தையும் பலத்தையும், தனக்கு ஏற்பட்ட சுகத்தையும் இப்போதுதான் அனுபவித்தது போல அந்த பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் பார்த்து அந்த அறைக்குள் வந்த, என் சக தோழர், என்னை அழைத்தார். நானும் அவருடன் பேசிக்கொண்டே அறைக் கதவு வரை வந்து திரும்பி பார்த்தேன். நான் பேசிய தமிழ் அவர்கள் இருவர் முகத்திலும் பீதியாய் எதிர்வினையாற்றியது.

இன்னும் நான் வேலை செய்து மற்ற தொழிற்சாலைகளிலும் இதே போல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது அதையெல்லாம் நினைக்கையில் எதைத்தான் நாம் வாழ்வின் லட்சியம் எனவும் பண்பாடு எனவும் வாழ்வின் தரிசனம் எனவும் காட்டி வருகிறோம் என புரியவில்லை, காட்ட முயல்கிறோம் எனவும் தெரிவில்லை.

அடிமட்டத்தில் மட்டுமல்ல, மேல்மட்டத்திலும்தான். உயர்நிலையில் வைத்திருக்கும் தத்தம் இருத்தலைக் காக்கவும் தொடர்ந்து மேலேறி செல்லவும் எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஒரு முறை கண்ணதாசனின் தத்துவ மொழிகள் என்ற புத்தகத்தில் படித்ததாக நினைவு,

‘எந்த பெண்ணும் நடிகனை, கட்டிலில் சந்திக்கும்வரை புகழ்ந்துக் கொண்டுதான் இருப்பாள்’

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768