இதழ் 13
ஜனவரி 2010
  க‌விதை
ஏ.தேவராஜன்
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

1

எமது வெற்றிடங்கள்
எல்லோருக்கும் புலப்படுகின்றன

விதவிதமான ஆயத்தங்களோடு
அவர்களின் நுழைதல்
நிகழ்கிறது

அவர்களுக்கான வெற்றிடங்களை
எமது வெற்றிடங்கள்
உற்று நோக்குகின்றன

எம்மால் அவற்றை
நிரப்ப முடியாதெனும் உணர்வு
அவர்களுக்குத் தெரியாத பட்சத்தில்
அவர்கள் பிரயாசைப்படுதலும்
பின்பு இடம் தடுமாறி
விழுதலும் வீணென்று
சொல்ல முடியாமல்
அவர்களைக் குறித்துத் தவித்தபடி
எமது வெற்றிடங்கள்
சில நினைவுகளை
நிரப்பிக்கொள்கின்றன.


2

எவ்வளவோ இருக்கின்றன
விவாதிக்கவும் பேசவும்

கடவுளிடம் பேசிப் பார்க்கலாம்
அவர்
இன்னொரு கடவுளைப்
பரிந்துரை செய்யாத வரை...

அந்தக் கடவுள்
இன்னுமொரு கடவுளைப்
பரிந்துரை செய்யாத வரை...

இத்தனை கடவுளரிடம்
பயணப்படுகையில்
இரண்டு நேரலாம்

அதில் ஒன்று
கடவுளை மறக்கக்கூடியதாகவும்
இருக்கலாம்.


3

சில விழிகளுக்குள்
ஊடுருவிச் செல்லலாம்
என முடிவெடுக்கையில்

எல்லார் உள் விழிகளுக்குள்ளும்
கடல் தெரிகிறது

அங்கே சுகமாய்
நீராட முடியவில்லை

அங்கு வீசும் பெருங்காற்றையும்
பேரலையையும்
சமாளிக்க முடிவதில்லை

ஒரு பாறையாய் நுழைந்து
துகளாகித் திரும்பும்
கரைகளின்
வாடிக்கையாகிவிட்டது.


4

பணிப்பெண்
தண்ணீர் விட்டுக் கழுவுகிறாள்
வீட்டை

எசமான் வருவதற்குள்
சொட்டுத் தடயமின்றித்
துடைத்துவிடுகிறாள்

நிலைப்பேழையில்
கண்ணாடிக்குள்
கண்ணாடி தெரிகிறது

அமைதியான
ஒரு மூலையில்
எழுந்த நூலாம்படை
காற்றில் அசைவாடி
தனக்குள் குடியிருக்க
அழைத்தன
சில பூச்சிகளை...

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>