முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 25
ஜனவரி 2011

  கவிதை
தேனம்மைலெக்ஷ்மணன்
 
 
       
நேர்காணல்:

"புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல"

ஆதவன் தீட்சண்யா


பத்தி:

இது இருப‌த்து ஐந்தாவ‌து இத‌ழ்
ம‌. ந‌வீன்


சிறுகதை:

சிற்றறிவு
எஸ். ராமகிருஷ்ணன்

அப்பாவின் தண்டனைகள்
ஏ. தேவராஜன்


பதிவு:

எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது


கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...7
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...14
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...2
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...1
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு ...1
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை ...1
பூங்குழலி வீரன்

வழித்துணை ...1
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை ...1
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு ...1
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம் ...1
தர்மினி

பயணிப்பவனின் பக்கம் ...1
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு ...1
யோகி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...15

தேனம்மைலெக்ஷ்மணன்

செல்வராஜ் ஜெகதீசன்

கே. பாலமுருகன்

எம். ரிஷான் ஷெரீப்

ரெ. பாண்டியன்


எதிர்வினை:

"மலேசியா - சிங்கப்பூர் 2010" வல்லினம் தொகுப்பை முன்வைத்து கவிதைகள் ஒரு பார்வை
தவமணி (KSAH)

ஒரு அதிஷ்டம் நிறைந்த நாள்
சுரேந்திரகுமார்

அறிவிப்பு:

எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீடு

நேர்காணல் மூன்றாம் இதழ்

கே. பாலமுருகனுக்கு 2009 ஆண்டிற்கான கரிகாற் சோழன் விருது

இஸ்திரிக்காரரின் மகள்

வீடுவீடாய்ச் சென்று படியேறி
உடுப்புச் சுமந்து சுமந்து
பழுக்காய்கள் நீக்கி
வெள்ளாவி வைத்து
உவர்மண்ணில் துவைத்து
கரைமண்ணில் உலர்த்தி
பெட்டிபோட்டுக்
காய்ப்பேறிப் போன கைகளை
நீவிவிட்டுக் கொள்கிறாள்..
உடுப்பெடுக்கச் சென்ற
மாடிவீட்டு அம்மாவின்
வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாக் கரங்களைப்
பார்க்கும் போதெல்லாம்...
அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..
அதிகச் சூட்டில் தீய்ந்த
ஓட்டையாய்..துளையிட்டுச்
செல்லும் பார்வையோடு..
சென்றபின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்....
அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்.

 

நா கொடுக்கு

கொட்டிவிட்டு மட்டுமல்ல
விதைத்துவிட்டும் செல்கிறது
அடுத்த கோபத்தை..
கசாப்புக் கடைக் கத்தியாயும்.,
ரத்தம் ருசிக்கும் அடித்தண்டாயும்..
இரும்பு கலந்து..
வால் முறுக்கி.,
விரட்டும் மாடாய்..
வெருட்டும் அரவாய்..
புன்னகைக் கைப்பிடி..
பொருத்திய வளைவாள்
உதடெனும் நாதாங்கிக்குள்..
எச்சமிட்டு எச்சமிட்டு
எச்சில் அமுதம்
பல்லி எச்சமாய்..
அன்பு புனைந்ததான
உயிர்மெய்கள் உண்டு
எச்சில் தழும்பு..
தேவதைப் பலியும்
நரம்பறுக்கும் எருதும்
காமாக்கியா தெப்பமாய்...
வெட்டி விழுந்தாலும்
திரும்ப வளரும்
பல்லிவாலும் கருவைமுட்களும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768