முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  கவிதை:
கருணாகரன்
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

நூறாயிரம் கோடி மழை குளித்த மலை

மலையைக் குளிப்பாட்டும் மழையின் நடனத்தில்
நெகிழ்ந்தது மலை
பேரிசையோடு நிகழ்ந்த ஆனந்த நடனத்தில்
தன்னை நெகிழ்ந்து நெகிழ்ந்தே கொடுத்த
மலை
பெருக்கெடுத்தது பேராறாய் அன்பூறி

மலையாறு
ஆனந்தக்களிப்போடு பொங்கிப் பெருகியது
பாறைகளும் நடனமாடின
மழையோடு கலந்து.

பேரிசைப் பெருவெள்ளம்
மழை நாளின் மலையெங்கும் நிகழ்ந்த
மறுநாள்
ஒளியழைத்த பகலில்
களைத்து ஆயாசமாய்க் கிடந்தது
மலை

மழைக்கு முன்னிருந்த நிலை
இல்லை இந் நிலை
இது இன்னொரு போது
மாறும் வெறொரு நிலையாய்
பிறகொரு நிலை

ஒன்றை மாற்றிக் குலைத்து
இன்னொன்றாக்கி
பிறிதொன்றாக்கி
இவ்விதம் மாறிமாறியே
பெருகும் நிலை மாற்றம்.

காலந்தோறும் வெள்ளம்
வெள்ளந் தோறும் நிலை மாற்றம்

இப்போதிருக்கும் மலையின் தோற்றம்
முன்புமில்லை
பின்னுமில்லை.

நான் பார்த்த மலையும்
முன்னிருந்த ஒரு தருணமே


பூதம்

மாபெரும் சிலந்தியின் நிழலில் மறைகின்றன
இப்பெரும் பூமியின் அலைகளும் கனவுகளும்
நிறங்களும்
ஊற்றுகளும்

அச் சிலந்தி
பின்னும் வலையில் இதோ எல்லாக்கண்டங்களும்
அவற்றின் நல்வினை தீவினைகளும்
ஊழும்.

நமது சிலுவைகளை நாமே செய்கிறோம்
நமது முகங்கள் பிரதிபலிக்கும்
புதைகுழிகளை நாமே வெட்டுகிறோம்.
நமது அறிவீனத்தின் வெற்றிடத்தில்
நிரம்புகிறது சாவுமணியின் பேரொலி
அதுவே வியப்பூட்டும் இசை நமக்கு
எங்கள் விதியின் சிறகை
நாமே வெட்டிக்களிக்கும்
நாட்கள் வந்தன
அதைப் பார்த்துக் களிக்கும் காலமும் வந்தது

ஒவ்வொரு சிலந்தியிடமும்
பூமியின் அலைகளையும் சிறகையும்
நிறங்களையும் அழிக்கும் கனவே
இந்த யுகத்தின் விதியாயிற்று.

நிறங்கள் அழிந்து
உருக்கள் அழிந்து
அசைவுகளும் சுழற்சியும் ஒடுங்கி
ஒரே அச்சில்
வார்க்கப்படும் பூமியை
ஓரே அச்சில் வார்க்கப்படும் மனிதர்களை
கொண்டியங்கும் மாபெரும் இயந்திரம்; சுழல்கிறது

இப்போது
நான் யாருடைய அச்சில் வார்க்கப்படுவது
அமெரிக்காவின் அச்சிலா
சீனாவின் அச்சிலா
இந்தியாவின் அச்சிலா
ஐரோப்பியக் கூட்டின் அச்சிலா

சிறிய அச்சுகள் பெரிய அச்சுகள்
இதோ அச்சிலுண்டாகிய பண்டங்கள் நாம் ஒவ்வொருவரும்.

கருவிகள் தயார்
நமது தலையில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தை
நாமே சுமக்கிறோம்
அது நம்முடையதல்ல என்றபோதும்

நானே என்னைத்தின்கிறேன்
நானே உன்னையும் தின்னுகின்றேன்.
நானே கிருமியானேன்
நானே நோயானேன்

தன்னைத்தானே தின்னும் பூதம் ஆனேனா கடவுளே...

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768