இதழ் 11
நவம்பர் 2009
  கவிதை
ஜீ.கே
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

அந்த நிமிடங்களில்...

எழுதி களைத்த பேனாவும்
பக்கம் முடிந்த நாட்குறிப்பேடும்
மீண்டும் என் கைப்படாமல்
என்னை விட்டு விலகும்
அந்த நிமிடமும்...

சலவை செய்த ஆடை என் நிமித்தம்
பட்டையில் கரையேற்றி
மறுப்பேதும் இல்லாமல் மறுபடி
சலவைக்கல்லில் ஓங்கி அறையப்படும்
அந்த நிமிடமும்...

சிறுகதை பேசி சில சமயம்
சிந்தனை செய்யும் போது
புகைத்து முடித்த சிகரெட் துண்டை
ஆஸ்ட்ரையில் புதைத்த
அந்த நிமிடமும்...

சக்கரமாய் சுழலபோகிறாய்
என்றுரைத்த நேற்றைய தேதி
என் கைப்பட கிழித்தெறிந்து
இன்றைய குப்பைத்தொட்டியில் உறங்கும்
அந்த நிமிடமும்...

எனக்குள் சிரிப்பையும்
மெளன அழுகையையும்
ஆழமான சிந்தனையும் தந்த
தொலைக்காட்சி இணைப்பை துண்டித்த
அந்த நிமிடமும்....

நாக்கை சுட்டுவிட்டதால்
திட்டிக் கொண்டே
தேநீர் கோப்பை
காலியாகிவிட்டத்தை நினைத்த
அந்த நிமிடமும்...

மின்சாரத் துணையுடன்
என் சுகத்துக்காய் தொடர்ந்தோடிய
மின்விசிறியின் இயக்கத்தை
ஒரு விசையில் நிறுத்திய
அந்த நிமிடமும்...

உற்றார் அமர்ந்து ஊர் அமர்ந்து
நானமர்ந்த தருணத்தில் ஒரு கால்
ஊனமாகிப்போனது நாற்காலி
என் வலக்கை நாற்காலியின் ஒரு கால்
ஆகிப்போன அந்த நிமிடமும்...

பின் சென்று கொண்டே
என்னை முன் தள்ளும்
காலத்தின் சில காட்சிகளின்
இந்த_அந்த நிமிடமும்...

சுயநலகாரனாகவே
தோலுரிக்கப்படுகிறேன்
அந்தந்த நிமிடங்களில்...



யதார்த்தங்கள்

யதார்த்தங்கள் சில சமயம்
காயங்களையே அர்ப்பணிக்கிறது...

இங்கு உன்னையும் என்னையும்
பற்றியுமான யதார்த்தங்கள்
வடம் பிடித்து இழுப்பவர்
ஆளுகைக்கு ஆட்பட்ட
ஆண்டவன் இல்லா தேர் போல்...

யதார்த்த மனிதர்கள்
யதார்த்த மனங்களை
ஏன் என்றே தெரியாமல்
கொய்து எறிகின்றனர்
யதார்த்தத்தின் ஆழம் புரியாமல்...

சிறு நடைப் பயணத்திலும்
சிற்றுண்டிச் சாலையிலும்
டீக் கடை கலாட்டாக்களிலும்
இலவச இணைப்பாகவே
மொழிப் பெயர்க்கப் படுகின்றன
நம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்
ஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...

சந்தர்ப்பங்களைத் தேடும்
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாசனம் கொடுக்கும்
சந்ததியினர் இருக்கும் வரை
காயச் சுவடுகளை நம் உள்ளங்களில்
பதித்துக் கொண்டே பயணிக்கும்
இது போன்ற சில யதார்த்தங்கள்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768