முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  கவிதை:
ம. நவீன்
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

கதவடைப்பு

வீட்டின் கதவை
நிரந்தரமாக அடைப்பது பற்றி
இன்று முடிவெடுத்தேன்

வீட்டின் கதவை நிரந்தரமாக அடைப்பது
வீட்டையும் சேர்த்து அடைப்பது போலதான்

வீடு இருந்தும் இல்லாதது போன்ற
மறைவை
அது உருவாக்கும்

அடைக்கப்பட்டிருக்கும் வீடுகள்
தன்னகத்தே கொண்டுள்ள வினோத
கதைகளில் ஒன்றினை
என் வீடும் கால ஓட்டத்தில்
சுயமாக உருவாக்கிக்கொள்ளும்

சூனியத்தை மட்டுமே
கக்கும் வீட்டைக் கொண்டிருக்கப்போகும்
நான்
இனி
தெருவில் நடப்பவருக்கு நிரூபிக்க எதுவும் இல்லை

வீட்டின் உள்ளே உள்ள கண்ணாடித்தொட்டியில்
மீன் உயிர்த்திருக்கிறதா என்றும்

சுழலும் போது மின்விசிறி
சப்தமிடுகிறதா என்றும்

அன்புள்ள மனிதர்களின்
நடமாட்டம் இருக்கிறதா என்றும்

இனி நிரூபிக்க ஒன்றும் இல்லை


பூட்டிய வீடுகள்

வீட்டின் கதவை பூட்டுதல்
அதை திறந்து வைத்திருப்பதைவிட
பாதுகாப்பற்றது

பூட்டியிருக்கும் வீடுகளில்
மர்மக்கதைகள் உலாவுகின்றன

தெருவில் போகும் மனிதர்கள்
நினைக்கும் உருவங்களின் நிழல்கள்
பூட்டியிருக்கும் வீட்டில் படிகின்றன

பூட்டிய வீடுகளின் வரலாற்றை
சுமப்பது சிரமம்
அது காலத்துக்குக் காலம் மாறுகின்றன

பூட்டிய வீட்டின்
பூட்டின் அளவைப் பொறுத்து
அதன் உள்ளுள்ள பிரமாண்டம்
முளைத்தெழுகிறது

பூட்டப்பட்ட வீடுகள் பாதுகாப்பற்றவை
அவை
பலநூறு வாசல்களை
சுயமாக உருவாக்கிக்கொள்கின்றன.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768