முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  பயணிப்பவனின் பக்கம் ...11
தயாஜி
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

“முகம் காட்டாத நுகர்வு உருவங்கள்”

இம்மாத இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருங்கால மனைவிக்கு இப்போதே செவி சாய்த்து புகைப்படம் எடுக்க சென்றோம். பல விதமான ஆடைகளில் பல விதமாக நிழல்படம் எடுக்கப்பட்டோம். காலை ஆரம்பித்த படப்பிடிப்பு மாலைதான் முடிந்தது. எடுத்தப் படங்களில் ஆல்பம் தயாரிக்க சில படங்களைத் தேர்ந்தெடுக்க சொன்னார்கள். நாங்கள் இருவரும் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே வரும் வேலை; ஒரு படம் என்னை அப்படியே நிறுத்தியது. அதில் என் முகம் எனது பழைய முகமாகத் தெரிந்தது. என் துணைவி என் தோளில் கை வைத்தவண்ணம் பின்னால் நிற்க நாங்கள் சிரிக்கும் படம் அது.

பல படங்களை சட் சட் என தேர்வு செய்த நான் இந்தப் படத்தில் மட்டும் சற்று நிறுத்தியது இளைப்பாற அல்ல. உண்மையில் அது என் பழைய முகமாகத்தான் இருந்தது.என் பள்ளிப்பருவ, கண்ணாடி முன் தோன்றும் முகம் அது என்பது மட்டும் உறுதி.

புகைப்படங்கள் என்பதில் காலத்தையும் காட்சிகளையும் நிறுத்துகிறோம். அதனை திரும்ப திரும்பப் பார்க்கிறோம். சிலர் காரணத்துடன் சில கண்ணீருடன் இன்னும் சிலர் வெறுமையில்.

பள்ளியில் பிடித்துக் கொடுத்த புகைப்படங்களின் மறக்காமல் சொல்லும் நண்பர்களின் பெயரில் இருக்கும் மகிழ்ச்சி, அந்த நட்பின் தொடர்ச்சியில் இருப்பதில்லை. நிழல் படங்களில் ஒருவர் இன்னமும் குளித்துக் கொண்டுதான் இருக்கிறார். எப்போது முடிப்பார் எனத் தெரியாமல். இன்னொருவர் வெட்கப்பட்டு குனிந்த தலைதான் நிமிரவே இல்லை. இப்படி நிழல்படங்களில் பலரை பலவகையில் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

ஆனால், இப்படி எந்த ஒரு ‘நிறுத்தலிலும்’ நில்லாமல், யார் என்றே தெரியாமல் ஒரு பெண் இன்னமும் என் நினைவுப் பதிவில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளின் நினைவின் ஊடே என் பால்ய வயதின் ஒரு மாலை முதல் சில இரவுகள் கலந்திருக்கின்றன. இப்போது நாங்கள் எடுத்த படத்தில் எனக்குத் தெரிந்த எனது பழைய முகம்தான் இதுவரை என்னுள் எங்கோ விலாசம் இல்லாமல் உலவிய அந்தப் பெண்ணையும் அவளுடன் என் சில பொழுதுகளையும் வெளிக் கொணர்ந்திருக்கின்றது. சம்பந்தமில்லாத நேரங்களில் சம்பந்தமில்லாத கணங்கள் சம்பந்தமே இல்லாத நினைவை மீட்டெடுப்பதுதான் ஆச்சரியம்.

லாடாங் பெர்படானான் யு.பி தமிழ்பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்து தாமான் ரியா ஜெயா இடைநிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்த நேரம் அது. அதுவரை உடன் படித்த சில நண்பர்கள் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார்கள். ஒரே தோட்டத்தில் இருந்துக் கொண்டு ஒரே வயது நண்பர்கள் வேறுவேறு பள்ளியில் படிப்பை தொடர்வதில் கவலையும் கொஞ்சம் சுவாரஸ்யக் கதைகளும் இருக்கவே செய்யும். அதிலும் சிலர் காலை பள்ளி இன்னும் சிலர் மதியப் பள்ளி.

கவலையையும் சுவாரஸ்ய கதைகளையும் பகிர்வதற்காகப் பள்ளிக்கு மட்டம் போட திட்டமிட்டோம். ஒரு நாள்தானே யாருக்குத் தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் தொடங்கியது பின்னர் ஒரு வருடத்தில் முப்பது நாள்களுக்கு மேலாகிப் போனது.

முதல் நாள் நாங்கள் சந்திக்கும் இடம் தீர்மானம் செய்யப்பட்டது. யு.பி தோட்டத்தில் இருக்கும் ஆறுமுகம் பிள்ளையின் பழைய பெரிய பங்களா வீடு. யாரும் அங்கே உட்பிரவேசிக்க கூடாது. ஆகவே அந்த பங்களாவிற்கு அருகில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டிக்கு சில அடிகளில் உட்கார்ந்து பேச தாராள இடம் என நண்பர்களில் ஒருவன் சொன்னதால் அங்கே செனறோம். அங்குள்ள பழத்தோட்டத்தில் பழம் திருட செல்லும் வழக்கமுடைய நண்பன் வழிகாட்ட நாங்கள் சைக்கிளில் பின் தொடர்ந்தோம்.

இடம் வந்தது. அந்த பெரிய தண்ணீர் தொட்டியை அபோதுதான் அருகில் பார்த்தேன். பெரியது என்று சொல்ல முடியாது. உண்மையில் ரொம்ப பெரிய தொட்டி அது. மேலே ஏறி உள்ளே எட்டிப் பார்த்தால் இதயத்தில் லேசாக சுருக் என சத்தம் கேட்கும். இதில் ஆச்சர்யம் எனவென்றால் நமக்கும் மட்டும் கேட்க வேண்டிய சத்தம் அருகில் உள்ளவர்க்கும் கேட்கும்.

உட்கார மட்டுமல்ல, புரண்டு படுக்கவும் வசதியான இடம். மினரல் வாட்டர் போத்தல்கள், கிழிந்த பாய்கள், படுக்க வசதி செய்யப்பட்ட நாளிதழ்கள், சிகிரெட் தூண்டுகள், ஆணுறை பொட்டலங்கள் (அப்போது ஆச்சர்யமாக இருந்தது).

ஒவ்வொரு கூட்டத்திலும் எல்லாம் தெரிந்த அல்லது எல்லாம் தெரிந்தது போல யாராவது ஒருவர் இருப்பார்கள். அப்படி எங்களுடன் இருந்த நண்பன் அந்த பொருள்களின் பயன்பாட்டை உணர்ச்சிப் பூர்வமாகச் சொன்னான். அப்போது எங்கள் பீதியை கிளப்பியது மோட்டர் சத்தம். அந்த இடத்தை காவல் காக்கின்றவர்கள்தான் என எண்ணி ஆளுக்கு ஒரு திசையாக ஓடினோம். பின்னர்தான் அது எங்கள் நண்பன் ஒருவனுக்கு தெரிந்தவர் என தெரிந்தது. பயம் குறைந்து நாங்கள் ஒவ்வொருவராக அவர் முன் வந்து எங்களை அறிமுகம் செய்தோம். அவருடன் எங்கள் உரையாடல் வழிதான் முகமறியாத ஒரு பெண் என்னுள் நுழைந்தாள். அந்த நபரைச் சுற்றி நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கேள்வி கேட்க அவரிடமிருந்து பதில்கள் வந்துக்கொண்டிருந்தன.

“அடச்சே நீங்களா டா.... நானும் எவனோ எவளையோ கூட்டி வந்திருக்கான்... வந்து பார்க்கலாம்னு நெனைச்சி வந்தேன்.... பழம் திருட வந்திங்களாடா...”

“இல்லன்னே.... இன்னிக்கு ஸ்கூலு லீவு அதான் இங்க அப்படியே சைக்கிள் எடுத்து ஒரு ரவுண்டு வந்தோம்...”

“ஓ... இங்க அடிக்கடி வராதிங்கடா.. கெட்டு போய்டுவிங்க... தெரிதா..?”

“ஏன் அண்ணே”

“சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரியாதுடா..”

“சொல்லுங்கண்ணே புரிஞ்சிக்கறோம்...”

“அப்படியா சொல்ற... சரி யார்கிட்டயும் இதை சொல்லக்கூடாது தெரிதா..?”
எல்லோரும் ஆர்வமாய் “ம்” சொல்ல; அவர் தொடர்ந்தார்.

“இங்க அடிக்கடி பசங்களும் பொண்ணுங்களும் வருவாங்க. அதுங்க இங்க பண்ற கசாமுசா இருக்கே.... அதுக்குன்னே நானும் என்னோட கூட்டாளியும் இங்க வந்து ரகசியமா பார்ப்போம். ஒரு வேளை ஆள் புதுசா இருந்தா அப்படியே அதுங்களை மிரட்டி நாங்களும் கொஞ்ச நேரம் விளையாடுவோம்னு வச்சிங்கோங்களேன்... என்னடா இப்படி பார்க்கறிங்க; இதுதான் நீங்க இங்க வர்ரது முதலும் கடைசியுமா இருக்கட்டும்....அப்பறம் ஒரு நாள், நானும் கூட்டாளியும் வந்தோம். ஒரு தமிழச்சியும் ஒரு இந்தோனேசியாக்காரனும் பாதி துணியில்லாம... கட்டிப் பொரண்டுகிட்டு இருந்துச்சுங்க... விடுவோமா... அந்த இண்டோனை அடிச்சி தோச்சிட்டோம்ல.... அந்தப் பொம்பள எங்களையே எதுத்துகிட்டு வருது...... ஏண்டி எங்களையெல்லாம் உங்கண்ணுக்கு தெரியாதான்னு கேட்டா...... என்னோட விருப்பம். எனக்கு இவரை புடிச்சிருக்கு. நான் இவருக்கு கொடுப்பேன் உனக்கு எந்த மயிருக்கு நான் கொடுக்கனும்... நீ என்ன என் புருசனா... அவரை அடிக்கற வேலையெல்லாம் வேணாம்...னு கத்துது”

“யார் அண்ணே அவங்க...?” நண்பர்களில் ஒருவன் கேட்க.

“ஏண்டா நீ போய் அவ வீட்டுக் கதவைத் தட்டப்போறியா.... அவளோட புருசன் உன்னை தட்டிப்புடுவான் தெரிஞ்சிக்கோ.... அவளே பாவம் புருசனுக்கு தெரியாம இங்க அப்பப்ப வந்துட்டு போறா... ?”

புரிந்தது போலவே எல்லோரும் சிரித்தோம். ஏனோ தெரியவில்லை அந்த முகமறியாத பெண்ணும் அவள் பேசியதாகச் சொல்லப்படும் வார்த்தைகளும் இன்னமும் நான் பயன்படுத்தும் வார்த்தைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கவே செய்கின்றன.

உடலின் புரிதலும் மனதில் புரிதலும் புரியாத வயதில் கேள்விபட்ட அதே சம்பவத்தை மீண்டும் நான் சந்தித்தேன். என் நண்பனின் குரலில்.....

“நீ வேற டா... அவளுக்கு ரெண்டு பிள்ளை இருக்கு தெரியுமா... எத்தனை தடவை sms பண்ணி கூப்டுருக்கா தெரியுமா...? எல்லாம் நம்ப பழகறத பொருத்துதான் இருக்கு...”

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768