இதழ் 10
அக்டோபர் 2009
  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்...1
ஜெர்மன் மூலம்: பெர்ட்டோல்ட் பிரெக்ட்
தமிழில்: இளங்கோவன்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
  ஒரு வாசிக்கத் தெரிந்த கூலியின் சில கேள்விகள்

ஏழுவாயில்களைக் கொண்ட தேபிஸ் நகரை
யார் கட்டியது?

புத்தகங்கள் சுட்டுவதெல்லாம்
மன்னர்களின் பெயரை

அம்மன்னர்களென்ன பாறைகளை
அடுக்கினார்களா?

தரைமட்டமாக்கப்பட்ட பேபிலோன்
ஒவ்வொரு முறையும்
நிமிர்ந்தது யாரால்?

தங்கஞ்சுரக்கும் லீமாவில் தொழிலாளர்கள்
தங்கியிருந்த வீடுகள் எப்படிப்பட்டவை?

சீனப்பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலை
கொத்தர்களெல்லாம் எங்குப் போனார்கள்?

ரோமாபுரியின் வெற்றி வளைவுகளைக்
கட்டியதார்?

சீசர்கள், வாகை சூடியது யாரை மிதித்து?
கவிதைகள் போற்றும் பைசேண்ட்டியத்தில்
வசிப்பதற்கு அரண்மணைகள் மட்டும்தானா?

அட்லாண்டிஸ் கண்டத்தை
கடல்கொண்ட நள்ளிரவு
மூழ்கியோர் நினைவெல்லாம்
தத்தம் அடிமைகளைப் பற்றித்தானாம்

இளம் அலெக்ஸாந்தர்
இந்தியாவை வென்றான்.
தனியாகவா?

சீசர் ஃகோவுல்சை கொன்றொழித்தான்.
அவனோடு ஒரு சமையற்காரன்
கூட செல்லவில்லையா?

ஸ்பெயின் வேந்தன் பிலிப்
தன் கப்பற் படை
தண்ணீரில் மூழ்கியதற்கு அழுதானாம்

அவன் மட்டும் தான் அழுதானா?

இரண்டாம் பிரெடரிக்
ஏழாண்டு போரில் வென்றான்.

வேறு யார் வென்றது?

ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றி
வென்றோர்க்கு யார் சமைத்துப் போட்டது?

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை
பார் புகழும் பெரிய மனிதனின் வருகை

வரிகளை யார் கட்டியது?

எத்தனை அறிக்கைகள்
எத்தனைக் கேள்விகள்

பெர்ட்டோல்ட் பிரெக்ட் (1898-1956)

ஜெர்மனிய இலக்கியத்தின் தீவிரமான குரல் என்ற முத்திரை சுமக்கும் பிரெக்ட், முதலில் கவிதைகளில் தொடங்கி பின்னர் நவீன நாடகத்திற்கு தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். பிரெக்டின் நாடகங்கள் தற்கால நாடகத் துறையைப் பெரிதும் பாதித்துள்ளன.

இங்கிலாந்தைப் போல் ஒரு தொடர்ச்சியான நாடக மரபு ஏதுமற்ற ஜெர்மனியில் பிரெக்டின் சர்ச்சைக்குரிய நாடகப் படைப்புகள் அரங்கேறியது, ஒரு மாபெரும் கலைஞனை உலக இலக்கிற்கு அடையாங்காட்டியது. தனது நாடகங்களால் அரசியல், அதிகாரம், பொருளாதாரச் சமூக இடைவெளிகள், மானுடம் போன்றவற்றின் அரிதாரத்தைக் கலைத்த பிரெக்ட், தன் கவிதைகளை மட்டும் வெளியிடாமல் கட்டிக்காத்து வந்தார்.

அவரது மரணத்திற்குப் பின்னரே ஒரு மகாகவியின் - முகம் வெளிப்பட்டது. அவரது படைப்புகளை ஜெர்மனியின் நாஸி அரசாங்கம் கடை செய்ததோடு, ஆறு வருடங்களை பிரெக்ட் அமெரிக்காவில் கழிக்கவும் வகை செய்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நாடு திரும்பிய பிரெக்ட் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்தாலும் எதேச்சதிகாரத்தை எதிர்த்தே குரல் கொடுத்து வந்தார்.

உலகெங்கும் எழுதப்படும் புதுக்கவிதை வடிவத்தில் அதிகம் விவாதிக்கப்படும் எதிர்க்கவிதை அம்சத்தை பிரெக்ட் அப்பொழுதே கையாண்டுள்ளது ஆச்சரியம்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768