முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  பயணிப்பவனின் பக்கம்... 13
தயாஜி
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

கட்டில் இரவுகளும் புரளும் உருவங்களும்

“எத்தனையோ பேர் ஆசைப்பட்டு வெளிய காத்திருக்காங்க; ஆனா உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா, அது உங்கள் படிப்பினால் மட்டும் இல்லை, இயற்கையோ கடவுளே உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே உண்மை”

கூறியவர் ‘இளசை சுந்தரம்’. 1976-ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியேற்றவர். அதோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட உரைச்சித்திரங்கள் அளித்துள்ளார். தற்போது சொற்பொழிவுகளிலும்; வானொலி பணியாளர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

அவருடன் ஏற்பட்ட சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு கூறினார். மனதில் இன்னமும் நிற்கும் வார்த்தைகள் அவை.

இதற்கென்று பிரித்தியேக தகுதியோ, படிப்பறிவோ இல்லாமல் எப்படியோ வானொலி துறைக்குள் நுழைந்துவிட்டேன். நம்பிக்கையும் அதுவரை படித்த புத்தகங்களே மூலம். ஒவ்வொரு அடியாக என்னை வளர்த்து வருகிறேன். பிறகு ஏற்பட்ட சந்திப்புகள், எதிர்ப்பார்ப்புகள், எதிரொலிகள், கைகுலுக்கல்கள், தொடக்கத்தில் விசித்திரமாகத் தோன்றின.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் ஒரு தொடர் சந்திப்பு இருந்தது. உண்மை சம்பவங்களை, தொகுத்து சம்பந்தப்படவர்களை பேட்டி கண்டேன். அதனை ‘கண்ணாடி துண்டுகள்’ எனும் தலைப்பில் வாராந்திர நிகழ்ச்சியாக தயாரித்து நடந்தினேன்.

வழக்கமான பேட்டிகள்; இரு நாற்காலிகளுக்கு இடையில் ஒலிபெருக்கியுடன் இடம்பெறும். எனது ஒலிப்பதிவு ஒலிப்பதிவு பெட்டியுடன் முன்பின் அறிமுகமில்லாத இடம், மனிதர்கள் இடையில் நடைபெற்றது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அந்நிய தொழிலாளர்கள், போதை பித்தர்கள், தூக்கு தண்டனை கைதி, கர்ப்பத்துடன் சிறைக்கைதிகள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். முக்கியமானவற்றை நினைவிலும் பலவற்றை கோப்பிலும் வைத்துள்ளேன்.

ஒருமுறை பாலியல் தொழிலாளி ஒருவரை பேட்டிகான யோசித்தேன். முதலில் எதிர்ப்பு வழக்கம் போல் வந்தது. பேட்டியின் காரண காரியங்களை விளக்கி அனுமதி பெற்றேன்.

பேட்டிக்காக தேர்ந்தெடுத்த இடம் ‘லிட்டல் இந்தியா’ என பெருமை பட்டுக் கொள்ளும், பிரிக்பீல்டின் (bricfield) பின்புறம். மனிதனுக்கு மட்டுமல்ல “முடித்தோம்”, “கிழிந்தோம்” என குதிக்கும் குதிப்புகளுக்கும், பின்புறம் என்பது முகச்சுழிப்பையும் மூச்சுத் திணறலையும் கொடுக்கிறது.

தேர்ந்தெடுத்த நேரம் உணர்ச்சிகள் உரிமை கேட்கும் இரவை.

பேட்டியில் ஒரு பிரச்சனை. போகும் இடம் சிகப்பு விளக்கு பகுதி. போவது பேட்டிக்கு. விளக்கில் ஒளியில் உள் நுழையும் போதோ வெளியேறும் போதோ யார் கண்ணில் பட்டாலும், என் உத்தம பிம்பம் உடைந்துவிடும். நின்று, வந்த விபரத்தை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. முகத்தை மறைத்தேன். தலைக்கவத்தில் கறுப்பு கண்ணாடி. அளவுக்கு பெரிய ஜீன்ஸ் சட்டை. மோட்டரை தூரத்தில் நிறுத்தி, நண்பனுடன் நடக்கத் தொடங்கினேன்.

எந்த ஒரு முகபாவமும் இன்றி ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் எதிர்ப்படத்தொடங்கினர். எதிர்ப்படல் தொடர்ந்தது. வேகமாகும் ஆமை நடையுமாய் என்னை அவர்கள் கடந்துப் போகும் எந்த நேரத்திலும் என் முகம் அவர்களுக்கு தெரிந்திருக்காது என்பது நிச்சயம் தெரிந்திருந்தது.

நான் அங்கே சுற்றிக் கொண்டிருப்பதை யார் பார்த்து பேசத் தொடங்கினாலும் அந்தப் பேச்சி தொடந்து என் வேலைக்கே ஆபத்தை விளைவிக்க கூடியது என்பதால், பேட்டியும் முக்கியம் எனக்கு நானும் முக்கியம்.

சாப்பாட்டுக் கடைகள் சாலையோரத்தில் இருந்தன. நல்ல வியாபாரம்தான் போலும். பரபரப்பை பார்க்கும் போது தெரிந்தது. ஜோடிக்காகவும் சிலர் ஜோடிகளுடனும் இருந்தார்கள். மொழிகள் கடந்த, நிறங்கள் கடந்த, மதங்கள் கடந்த, வயதுகள் கடந்த, உடல்கள் உடல்கள் ஒன்றிணைய ஒத்திகையை அந்த நேரத்தில் பார்க்கலாம்.

மார்பு குழி தெரிய மதுவின் துணையுடன் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வார்கள். யாதொரு இருப்பையும் கூட சட்டை செய்யாமல் ஒருவரை ஒருவர் முத்தமிடுவர். அந்தச் சத்தமே பக்கத்து மேஜைக்காரர்களைத் தூண்டிவிடும்.

இரு கடைகளுக்கு மத்தியில் வாசல்கள் இருக்கும். இரண்டு மாடி. வாசலில் ஒற்றை நாற்காலி. பன்றி முகமாய் ஒருவன் இருப்பான். ஒவ்வொரு வாசலிலும் அப்படியே இருக்கும். வெளியில் ஒரு பன்றியென்றால் ஒவ்வொரு அறைக்குச் செல்லும் வழியிலும் சில பன்றிகள் நடமாடிக்கொண்டிருக்கும்.

உள்ளே நுழைந்தோம். எங்களைப் போலவே தலைக்கவசம், கறுப்பு கண்ணாடிகளுடன் இளைய உருவங்களும் தொங்கிப் போன தொப்பைகளும் வெளிவந்தன / உள்புகுந்தன.

அறைகளின் வாசல்களில் அரைகுறை ஆடையுடன் நின்றுக் கொண்டு வழியில் நடக்கும் ஒவ்வொருவரையும் அழைக்கும் அழகிகள். அழைக்கும் குரல்கள்...

“50 வெள்ளி”

“100 வெள்ளிதான்”

“சாயாங், இங்க வா 50 வெள்ளி கொடுக்கமாட்டியா”

“ஹேய், 30 வெள்ளிதான், வேணும்னா ரெண்டு தடவை செய்யி... வா...”

சில முகங்கள் இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது, அவர்களின் முகத்தை பார்க்கமுடிவதில்லை.

சிலர் எங்கள் சாட்டையையும் கால்சட்டையையும் பிடித்து உரிமையுடன் இழுக்கிறார்கள். ஒருத்தி என் ஜீன்ஸையே அவிழ்க்க முயன்றாள்...!வயதானவர்கள், இளம் பெண்கள் வயதுக்கு ஏற்றார்போல தேர்ந்தெடுக்க வசதியும் செய்து தர ஒரு பன்றிமுகம் சுற்றிக் கொண்டே இருந்தது. இப்படியே அந்தப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறைகளும் எண்ணிக்கைச் சொல்ல விரும்பாத பெண்களும் இருந்தார்கள்.

ஆளுக்கு 50 வெள்ளி கட்டி, அறைகளில் நுழைந்தோம். ஆள் நடமாடக்கூடிய ஓர் அறை. தண்ணீர் குழாய். அமிக்கிப் போன மெத்தை. துணிகளை மாட்ட இரண்டு ஆணிகள். ‘வலிக்காமல் இருக்கவும் வேலையை சுலபமாக்கவும் தொடர்ந்து வேலை செய்யவும்’ அவர்களுக்கு பிரத்தியேக தைலம். (அவர்களே சொன்னார்கள்).

பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் உதவியுடன் வேறொரு நாள் பேட்டியை ஒதுக்கினேன். அவர்களின் ஒவ்வொரு அசைவும் பெரிய ‘பன்றி’ ஒன்றால் கவனிக்கப்படுவதாகக் கூறியப் பிறகு உடன் படுக்கவோ பேட்டி எடுக்கவோ முடியவில்லை. ஆனாலும் ஆடை கலைந்த நிலையில்தான் அந்த கொஞ்ச நேர உரையாடல் இருந்தது.

பிறகொரு நாள் பேட்டியை போலிஸ்காரார்கள், நிருபர் ஒருவர் உதவியுடன் எடுத்து முடித்தோம்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் நிர்ணயிக்கப்பட்ட தொகை 500 வெள்ளிக்கும் மேல். இன்று 20 வெள்ளி வரை இறங்கி வர காரணம் எண்ணிக்கைதான்.

ஒருத்தியாய் இருக்கும் போது அவள் தனக்கு 500 வெள்ளியை நிர்ணயிக்கிறாள். வேறு வழி இல்லை. சென்றுதான் ஆக வேண்டும். ஆனால் இன்று ‘ஒருத்தி’, ‘ஒருத்தி-களாய்’ அதிகரிக்கவும் வேறு வழியின்றி தங்களின் தொகையை 20 வெள்ளிவரை குறைத்து வருவதை விடாமல் இருக்க செய்கிறார்கள். இவர்கள் இருப்பது குற்றம் அல்ல. இவர்களை அதிகரிக்க வைப்பதுதான் குற்றம். ஊர் மெச்சிக்கொள்ள ஒரு முறை இந்த கடைகளை மூடி ‘சீல்’ வைந்தார்கள்.

இன்னமும் அந்த ‘சீல்’கள் இருக்கின்றன. ஆனால் திறந்த கதவுகளில்.

இதுவெல்லாம் எங்கோ ஒரு மூலையில், ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் நடக்கவில்லை.

லிட்டல் இந்தியா என பெருமைப்படும் Brickfields-ன் பின்புறம். முன்புறத்திற்கும் பின்புறத்திற்கும் நடந்தால் பத்து வினாடிகள்தான் வித்தியாசம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768